Monday, September 24, 2012

ரஜினியை உருவாக்கிய கலைஞானம்

ரஜினி ஆறுபுஷ்பங்கள் படத்தில் நடித்த பொழுது அந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதிய கலைஞானம் அவர்களின் நட்பு கிடைத்தது. கலைஞானம் ரஜினியிடம் , தான் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அந்தப் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.பெருமகிழ்ச்சியடைந்த ரஜினி கலைஞானத்திடம் 5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டார். இளையராஜா இசையில் டி.எம்.எஸ் நண்டூறுது, நரியூது பாடலை பாடினார். ஏதோ ஒரு படப்பிடிப்பிலிருந்த ரஜினி, இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே ஏவி.எம்.ஸ்டூடியோவிற்கு வந்திருக்கிறார். டி.எம்.எஸ் பாடுவதை கேட்டுவிட்டு கலைஞானம் கையை பிடித்துக்கொண்டு, “கலைஞானம் சார் .. டி.எம்.எஸ். பாடி அதில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை ” என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். 0 *பைரவி (1978) *, ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் படம். இந்தப்படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இந்தப் படம் தான் ரஜினியை உச்சத்தில் ஏற்றியது. இந்தப் படத்தின் வினியோகஸ்தரான தாணு , ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் அளித்தார். எம்.பாஸ்கர் ஸ்ரீதரின் மாணவர், வெண்ணிற ஆடை படத்தில் உதவியாளராகச் சேர்ந்த இவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் ஸ்ரீதரிடம் வேலை பார்த்தார். 0 எம்.பாஸ்கர் இயக்கிய *பெளர்ணமி அலைகள்* (1984) படத்திலுள்ள அத்தனை பாடல்களும் தேன் சொட்டும் பாடல்கள் , இசை சங்கர் கணேஷ் , குறிப்பாக ஜெயச்சந்திரனும் வாணிஜெயராமும் பாடிய *தேன் பாயும் வேலை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டு பாடும் தெய்வங்கள் நல்வாழ்த்துக் கூறும் * என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் http://www.inbaminge.com/t/p/Pournami%20Alaigal/Then%20Payum%20Velai.... 0 எம்.பாஸ்கர் இயக்கிய பன்னீர் நதிகள்(1986) படத்தில் காந்தர்வக் குரலான் பாடிய *பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்ப கலையோ* என்ற வர்ணனைப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

சீர்காழி கோவிந்தராஜன்

சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சீர்காழியின் தந்தை சிவசிதம்பரம் கலைநாட்டம் மிக்கவர் . சீர்காழி கோவிலொன்றில் இராமயண இசை நாடம் நடத்தி வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்து பாடல்களும் பாடினார் கோவிந்தராஜன்,இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்ட கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை நடிகராகச் சேர்த்துவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அப்போதே கணித்துச்சொன்னார்கள். 0 பி.ஏஸ்.செட்டியார் , கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ் இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார். 1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜன் கதவைத் தட்டியது.. 0 கல்கி எழுதிய பொய்மான் காடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கோவிந்தராஜன். 0 ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கு சீர்காழியும் சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸும் பாடி வந்தார்கள். கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (ஏழு நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார். பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88) 0 சீர்காழி கோவிந்தராஜன் பக்தி,வீரம் , காதல், காமெடி, தத்துவம், எழுச்சி என்று பல ரசங்களில் பாடியிருந்தாலும் அவர் பாடியவற்றுள் காதல் ரசம் பொங்கும் பாடல்களை மட்டுமே மிகவும் விரும்பிக் கேட்பேன். 0 அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு - தைபிறந்தால் வழி பிறக்கும் 0 மாம்பழத் தோட்டம், மல்லிகைக் கூட்டம்,மணக்க வரும் மாலைப் பொழுதோடு மருவியணைக்கும் மயக்கம் பிறக்கும் மலர்ந்து வரும் ஆசை விழியோடு மன்மதன் வந்தான் தேரோடு....இங்கே .. காதலர் கண்ணும் நெஞ்சும் படக் படக் பட் பட் - ஒளிவிளக்கு 0 வட்ட வட்டப் பாறையிலே வந்து நிக்கும் வேளையிலே யார் கொடுத்த சேலையடி ஆலவட்டம் போடுதடி - பழனி 0 அன்பே என் ஆரமுதே வாராய் / தென்றலலை மீதினிலே திங்கள் பிறை தோணியினிலே தேன்மொழி உனை அழைத்தே செல்வேனே - கோமதியின் காதலன் 0 கூத்தாடும் கொண்டையிலே தொங்குதடி மல்லிகைப்பூ கேக்காத கேள்வியெல்லாம் கேட்குதடி உன் அழகே 0 பழனி சந்தன வாடை அடிக்குது பூசியது யாரோ பவள குங்கும நெத்தி மணக்குது சூடியது யாரோ இங்கு குயில போல பாட்டு வந்தது பாடியது யாரோ மெல்ல குலுங்கும் சலங்கை ஓசை வந்தது அடியது யாரோ - வாழ்க்கைப் படகு 0 காதல் உண்டாகும் கட்டழகி உன்னாலே நெஞ்சு ஒண்ணாகும் பக்கத்திலே நின்னாலே அடே கண்ணு சின்ன பொண்ணு என்னை கொஞ்சாதே கோழிமுட்டை கண்ணாலே - இரு வல்லவர்கள் 0 வாம்மா வாம்மா சின்னம்மா வயசு வந்த பொன்னம்மா இந்த நேரம் காட்டுக்குள்ளே எங்கே வந்த செல்லம்மா - தாயில்லா பிள்ளை 0 பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது - கொடுத்து வைத்தவள் 0 எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்நாளே இமையும் விழியும் போலே இணைந்தோம் அன்பினாலே - சக்கரவர்த்தித் திருமகள் 0 கரும்பாக இனிக்கின்ற பருவம் .. இதை கதையாக சொல்லுது உன் காதல் உருவம் .. அழகான மொழி பேசும் விழி இரண்டும் அமுதம் அதிலே நீ தருகின்றாய் பருகாத அமுதம் - கொங்கு நாட்டு தங்கம் 0 ஜிகு ஜிகு உடையிலே ஜில் ஜில் நடையிலே ஜெகமே தன்னால் மயங்குமே சிங்கார சிலையே நீ திரும்பி பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே - சபாஷ் மீனா 0 காதலென்னும் சோலையிலே ராதே ராதே நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே - சக்கரவர்த்தித் திருமகள் 0 தட்டு தடுமாறி நெஞ்சம் கை தொட்டு விளையாட கொஞ்சும் சிட்டு முகம் காதல் சொல்லும் கை பட்டு மலர் மேனி துள்ளும் - சாரதா 0 சிங்கார தேருக்கு சேலை கட்டி / சின்ன சின்ன இடையினில் பூவக்கட்டி தெரு தெருவா அத நடக்கவிட்டா / இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும் ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும் - இது சத்தியம் 0 சீவி முடிச்சிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு / தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா மச்சான் தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா /ஆறு புரம் தங்க மணி அல்லி வேஷம் போடுறாளாம் / நாடகம் பார்க்கப் போறேன் வாரியா பொண்ணே நாளைக்கி திரும்பிடலாம் ஜாலியா - பிள்ளைக்கனி அமுது 0 பொங்கும் அழகு பூத்து குலுங்கும் தங்கதாமரையே /அன்பு வெள்ளம் அள்ளி வழங்கும் இன்பக் காவிரியே - தங்கம் மனசு தங்கம் 0 உலகமெல்லாம் இருண்டது போல் தோணுது/உன் உருவம் ஒளிவிளக்காய் காணுது - கலைகள் எல்லாம் உன் வடிவினால் / மெய்க் காதலினால் எனக்கு சொந்தமானது- நான் கண்ட சொர்க்கம் 0 வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து /வாடாமல் இருக்கும் பூ என்ன பூ அன்புக் கணவனின் முன்னாலே மனைவி / அழகாகச் சிந்தும் புன்சிரிப்பூ - எங்கள் குல தேவி 0 வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய் மனமோகனா சுகுமாரா மறவேன் உனை எழில் தீரா - ராஜாதேசிங்கு 0 யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது - சபாஷ் மாப்பிள்ளை 0 செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் / தித்திக்கும் தேன் குடமே செண்பக பூச்சரமே செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் - யானைப்பாகன் 0 நிலவோடு வான்முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு எனதுள்ளம் உனைதேடுதே - ராஜராஜன் 0 இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே உமது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கியிசை பாடுதே - ராஜராஜன்

Sunday, June 3, 2012

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்

நான் சென்னைக்கு வந்த புதிதில் பல்லவன் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கூடவே சில துணை நடிகர்கள் பயணிப்பதைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை குள்ளமணி கண்டக்டர் சீட்டில் உட்கார்ந்திருந்தார். தன்னை யாராவது அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தார் , நான் அவரைப் பார்த்து சிரித்தேன். அடையாளம் தெரிந்துவிட்டதா என்ற அர்த்தத்தோடு பதிலுக்கு அவரும் சிரித்தார். குள்ளமணி , புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்திருக்கார். ஒரு ஓட்டலில் வேலை கேட்டதற்கு *டேபிள் உயரம் கூட இல்லை எப்படி டேபிளைத் துடைப்பாய்* என திட்டி அனுப்பிவிட்டார்கள். மனதொடிந்த மனிதருக்கு மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் வேலை கொடுத்திருக்கிறார். குள்ள மணி 34 படங்களில் ஜெய்சங்கருடன் நடித்திருக்கிறார். குள்ளமணியாக இருந்தாலும் சரி குண்டு கல்யாணமாக என்றாலும் சரி எந்த ஒரு துணை நடிகருக்கும் கஷ்டம் என்றால் ஓடோடிப் போய் உதவும் மனப்போக்கு ஜெய்சங்கருக்கு இறுதிவரை இருந்திருக்கிறது. தான் உதவி செய்தவர்களைத் தான் இறந்த பிறகு தொந்தரவு செய்யக்கூடாது என தன் மகன்களிடம் அன்புக்கட்டளையிட்டிருந்தாராம் ஜெய். ஜெய்சங்கரின் இயற்பெயர் சங்கர். இயக்குநர் தளியத் ஜோசப் இவர் பெயருக்கு முன்னால் ஜெய் சேர்த்து ஜெய்சங்கராக்கி இரவும் பகலும்(1965) படத்தில் கதாநாயகனாக நடிகக்வைத்தார். அசோகன் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.அசோகனும் ஜெய்சங்கரும் ஒரே தட்டில் சாப்பிடும் அளவுக்கு நெருக்கமானவர்கள் .அசோகனின் இறுதிச் சடங்கை அருகில் இருந்து செய்து கொடுத்திருக்கிறார் ஜெய் 0 தொடர்ந்து 150 படத்திற்கு மேல் கதாநாயகர்களாக நடித்தவர்கள் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தான். ஜெய்சங்கரின் 150 வது படம் வண்டிக்காரன் மகள். ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை ஹீரோ என்ற பட்டமும் உண்டு .வாரம் ஒரு படம் என்ற கணக்கில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு படம் வெளிவரும் அளவிற்கு நடித்திருக்கிறார். இவர் புண்ணியத்தில் திரைத்துறையில் இருந்த அடிப்பொடி நடிகர்களுக்கெல்லாம் தொடர்ந்து வருமானம் கிடைத்திருக்கிறது. வியட்நாம் வீடு சுந்தரம் தான் இயக்க இருக்கும் விஜயா படத்தில் நடிப்பதற்கு ஜெய்சங்கரைக் கேட்டிருக்கிறார்.*உன் படத்துல சிவாஜி தானப்பா நடிப்பாரு* எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம் ஜெய். பிறகு தனது மேக்கப்மேனிடம் சொல்லி வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்.சரி நான் நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டார் ஜெய் , அந்நேரம் ஜெய் வேறொரு படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்தின் பாடல்காட்சி ஒன்றை சூட் செய்து கொண்டிருந்த பொழுது சுந்தரத்தின் மனைவிக்கு குழந்தை பிறந்து விட்டது என சேதி வந்திருக்கிறது , உடனே ஜெய் *நான் பாட்ட சூட் பண்ணிக்கிறேன் நீ கிளம்பு *என சுந்தரத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ஜெய்சங்கரின் கிருதா கொஞ்சம் நீட்டிக் கொண்டு விகாரமாய் இருந்திருக்கிறது , இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு தான் அவர் கிருதாவைக் குறைத்து திருத்தி அமைத்தார்கள். 0 ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடித்தார் ஜெய் . அப்பொழுது ரஜினி காந்த் *நூற்றைம்பது படங்களில் ஹீரோவாக நடித்த ஜெய்சங்கர் வில்லன் என்பதால், படத்தின் விளம்பரங்களில் அவருக்குரிய முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்துவிடாதீர்கள்* என்று கண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறார். ஜெய்சங்கர் நடித்த பாலாபிஷேகம் படத்தை போரூருக்கு அருகில் உள்ள கெருகம்பாக்கத்தில் தான் படம்பிடித்திருக்கிறார்கள்.ஜெய் , அந்த ஊர் பள்ளிக்கூடம் ஒன்றிற்கு வானொலி ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். மேலும் தான் படித்த சென்னை புதுக் கல்லூரிக்கு உணவு விடுதி ஒன்றைக் கட்டிக் கொருத்திருக்கிறார் ஜெய். 0 ஜெய்சங்கர் படங்களில் இடம்பெற்ற சில பாடல்கள். …. இவர் ஒரு அழகிய பூஞ்சிட்டு வயசு ஈரொன்பது பதினெட்டு உடலது பனிவிழும் மலர்மொட்டு பேசும் ஒவ்வொரு சொல்லும் தேன்சொட்டு – காதல் படுத்தும் பாடு http://www.youtube.com/watch?v=u-DcDKA8PDY அவள் ஒரு பச்சை குழந்தை பாடும் குழந்தை பருவம் பதினாறு – நீ ஒரு மகாராணி http://www.youtube.com/watch?v=Zdg78yqoaBA அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம் நங்கை முகம் நவரச நிலவு – வீட்டுக்கு வீடு http://www.youtube.com/watch?v=JqD6SRwLHuE மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு நான் வெச்சேனே என் கண்ண ஒம்மேலதான் – பாலாபிசேகம் http://www.youtube.com/watch?v=YC7CWywsuwc புன்னகையோ பூமழையோ பொங்கிவரும் தாமரையோ மானினமோ நாடகமோ மாதரசி யார் உறவோ http://www.youtube.com/watch?v=gfitdf680wE நித்தம் நித்தம் ஒருபுத்தம் புதிய சுகம் நான் தேடினேன் இளமை கொஞ்சும் விழி தலைமை தாங்கும் உனை என்றும் நாடினேன் – நூற்றுக்கு நூறு http://www.youtube.com/watch?v=FgDnA_jPldw சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் அன்பு வெட்கத்தில் விளங்கும் விளக்கம் – குலமா குணமா http://www.youtube.com/watch?v=xsaZW8MVlys கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் – மேயர் மீனாக்க்ஷி

Wednesday, June 8, 2011

SPB P Suseela Duets - Part 7

1) உன் காதோடு காதோடு
சேதி சொன்னால் ஒரு கண்மணியே - நிஜங்கள்

Get this widget | Track details | eSnips Social DNA


2) எங்கள் வீட்டு தங்க தேரில்
எந்த மாதம் திருவிழா - அருணோதயம்

Get this widget | Track details | eSnips Social DNA


3) கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ - மன்னவன்

Get this widget | Track details | eSnips Social DNA



4) மாணிக்க வீணையின் ராகம்
காணிக்கை தந்தது மோகம்- வீடு வரை உறவு

Get this widget | Track details | eSnips Social DNA


5) முத்துத்தாரகை வான வீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர - ஒரு கை ஓசை

Get this widget | Track details | eSnips Social DNA



6) நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும்
நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள்- தலைவன்

Get this widget | Track details | eSnips Social DNA



7) நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ - எதிரிகள் ஜக்கிரதை

Get this widget | Track details | eSnips Social DNA



8) நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன் -நான்கு சுவர்கள்

Get this widget | Track details | eSnips Social DNA



9) படகு படகு ஆசைப் படகு
போவோமா பொன்னுலகம் - உத்தமன்

Get this widget | Track details | eSnips Social DNA



10) பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத் தான் கண்டதுண்டு - கண்ணாமூச்சி

Get this widget | Track details | eSnips Social DNA

SPB P Suseela Duets - Part 6

1) ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்த தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது - மழை மேகம்

Get this widget | Track details | eSnips Social DNA


2) ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே - தொட்டதெல்லாம் பொன்னாகும்

Get this widget | Track details | eSnips Social DNA


3) எந்தன் தேவனின் பாடலென்ன அதில் ஏங்கும் ஏக்கமென்ன
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வா என்று சொல்லாதோ
அள்ளவோ உண்ணவோ

Get this widget | Track details | eSnips Social DNA


4) இதத்தான் ரொம்ப ரசிச்சேன் அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே - எங்க ஊர் கண்ணகி

Get this widget | Track details | eSnips Social DNA


5) காதல் காதல் என்று கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ - உத்தரவின்றி உள்ளே வா

Get this widget | Track details | eSnips Social DNA


6) ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை
இவள் ராஜவம்சமோ ரதி தேவி அம்சமோ - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

Get this widget | Track details | eSnips Social DNA


7) பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனெடுக்கலாமா நீ தடுக்கலாமா - அன்பு ரோஜா

Get this widget | Track details | eSnips Social DNA


8) பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
கண்களால் சொல்லட்டுமா - சீர்வரிசை

Get this widget | Track details | eSnips Social DNA


9) துளித் துளி மழைத்துளி அது தொடத் தொட சிலிர்த்தது மலர்க் கொடி
இந்த பூமிக்குத் தீர்ந்தது தாபம் இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்

Get this widget | Track details | eSnips Social DNA


10) உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன் - மாப்பிள்ளை அழைப்பு

Get this widget | Track details | eSnips Social DNA


11) வரவேண்டும் மகாராஜன் தரவேண்டும் சுகராகம்
இளங்காற்றில் பின்னலிட்டு இதமான தொட்டில் கட்டு - பகடை பன்னிரெண்டு

Get this widget | Track details | eSnips Social DNA


12) யாருமில்லை இங்கே இடம் இடம்
இது சுகம் சுகம் தரும் தரும் - பணத்துக்காக

Get this widget | Track details | eSnips Social DNA

SPB P Suseela Duets - Part 5

1) அடி கண்மணி வண்ணப் பைங்கிளி
சின்னப் பூங்கொடி என்னைத் தாங்கடி
இந்த நேரம் என்ன நாணம் - அவள் ஒரு அதிசயம்

Get this widget | Track details | eSnips Social DNA


2) ஆரம்ப காலத்தில் ஆசை பிறக்கும்
அம்மம்மா அதிலே ஏதொ இருக்கும் - அரங்கேற்றம்

Get this widget | Track details | eSnips Social DNA


3) எதிர் பார்த்தேன் உன்னை எதிர்பார்த்தேன்
சொல்ல முடிய சேதி எதோ சொல்வதற்காக அதற்காக
அன்பு சகோதரர்கள்

Get this widget | Track details | eSnips Social DNA


4) கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே
முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்தது என் இதழ் மேலே - யார் ஜம்புலிங்கம்

Get this widget | Track details | eSnips Social DNA


5) மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக
செண்பகத்தை வாங்கி வந்தேன் பெண்முகத்தின் நினைவாக - பால்குடம்

Get this widget | Track details | eSnips Social DNA


6) வானத்தைப் பார்த்திருந்தேன் உந்தன் வண்ணம் தெரிந்ததடி
வட்ட நிலவினிலே உந்தன் வாலிபம் வந்ததடி - பட்டம் பதவி

Get this widget | Track details | eSnips Social DNA


7) தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே இந்த ராஜாவும் தவமிருந்தான் - ரகுபதி ராகவ

Get this widget | Track details | eSnips Social DNA


8) கல்யாண மாலை கொண்டாடும் வேளை
வரவேண்டும் தரவேண்டும் - ராமன் பரசுராமன்

Get this widget | Track details | eSnips Social DNA


9) சுகமா தலைவா சுவை நீ தரவா
இதழ் அது தேன் குடம் இனியது உன் வசம்
இடை ஒரு பாத்திரம் நீ தொட மாத்திரம்
உன் விருந்து நீ அருந்து - நினைவிலே ஒரு மலர்

Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, June 5, 2011

Rare Gems of SPB

1) அலைகளே நீ வா .. அவருடன் நீ வா-
கவிதை அலைகள் , எஸ்.பி.பி , உமா ரமணன்

Get this widget | Track details | eSnips Social DNA


2) இதயம் இதயம் முழுதும் - இதயம் பேசுகின்றன - எஸ்.பி.பி , ஜானகி

Get this widget | Track details | eSnips Social DNA


3) மாங்கனி செம்மாங்கனி - காலடி ஓசை - எஸ்.பி.பி , கெளசல்யா

Get this widget | Track details | eSnips Social DNA


4) ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல - நான் சூட்டிய மலர் - எஸ்.பி.பி. ஷைலஜா

Get this widget | Track details | eSnips Social DNA


5) அசைந்தாடும் ஓவியம் அழகான காவியம் - புதுயுகம் பிறக்குது - எஸ்.பி.பி. , ஸ்வர்ணா

Get this widget | Track details | eSnips Social DNA


6) சொர்க்கத்தைப் பார்க்கிறேன் உன்னிடம்
இன்பத்தைக் கொண்டுவா என்னிடம் - அவள் ஒரு அதிசயம் - எஸ்.பி.பி. வாணி ஜெயராம்

Get this widget | Track details | eSnips Social DNA


7) அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு - ராஜாவுக்கேத்த ராணி - எஸ்.பி.பி. வாணி ஜெயராம்

Get this widget | Track details | eSnips Social DNA


8) தேவார பாட்டும் தேனூறும் இசையும் - தாளம் தவறிய ராகம் - எஸ்.பி.பி. வாணி ஜெயராம்

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, May 26, 2011

SPB Solo songs - Part 3

1) யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
சுகம் தரும் நிலா வரும் திருவிழா
- என் ப்ரியமே

Get this widget | Track details | eSnips Social DNA


2) இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகுகிற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம் - அக்கரைக்கு வாரீங்களா ?

Get this widget | Track details | eSnips Social DNA


3) கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரைகள் தாண்டுமா - மகரந்தம்
Get this widget | Track details | eSnips Social DNA


4) ஒரு பாடலை பல ராகத்தில்
உனை பார்த்துப் பாடினேன் - மல்லிகை மோகினி

Get this widget | Track details | eSnips Social DNA


5) சித்திரப்பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி மூடி வரும் முழு நிலவோ - புதுச்செருப்பு கடிக்கும்

Get this widget | Track details | eSnips Social DNA


6) தொடங்கலாம் தொடரலாம்
தொடங்கலாம் இனிய தனியிடம் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம் - காலமடி காலம்

Get this widget | Track details | eSnips Social DNA


7) கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல - அக்னி சாட்சி

Wednesday, May 25, 2011

SPB - Suseela Duets - Part 4

1) ஒரு புஷ்பம் மலர்ந்தது ..அதன் அர்த்தம் புரிந்தது
நான் கைகொண்டு பறித்தால் .. மைகொண்ட கண்கள்
ஏன் தான் சிவந்தது - பருவம் ஒரு பாடல்

Get this widget | Track details | eSnips Social DNA



2) நினைத்ததை முடிப்பது .. கிடைத்ததை ரசிப்பது
என்றும் ஆனந்தம் - ஆயிரத்தில் ஒருத்தி

Get this widget | Track details | eSnips Social DNA


3) ஆரம்பம் யாரிடம் .. உன்னிடம்தான்
ஆசை பொங்கும் சொல்ல சொல்ல
ஆனந்ததந்தான் மெல்ல மெல்ல - மிஸ்டர் சம்பத்

Get this widget | Track details | eSnips Social DNA


4) அழகே உன் பெயர் தானோ .. அமுதே உன் மொழி தானோ
நடந்தால் சிந்து கவியோ .. நீ நறுந்தேன் தந்த சுவையோ
- இறைவன் இருக்கின்றான்.

Get this widget | Track details | eSnips Social DNA


5) கண்ணோடு மீனைக் கண்டு கண்ணாடி மேனி கண்டு - தலைப் பிரசவம்

Get this widget | Track details | eSnips Social DNA


6) மகராணி தேரிலே மகராஜன் நேரிலே
ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன் - மேற்கே உதிக்கும் சூரியன்

Get this widget | Track details | eSnips Social DNA


7) நீயின்றி நானோ .. நானின்றி நீயோ
நிலவின்றி வானோ .. இதை நினைவில் கொள்வாயோ - மகரந்தம்

Get this widget | Track details | eSnips Social DNA


8) நிலவில்லாத வானம் ஏது காதலி
ஒரு நிழலில்லாத சோலை ஏது நாயகி
அட ஆடி மாதக் காற்றே
கொஞ்சம் ஜோடி போட்டு பாடு - நினைவிலே ஒரு மலர்

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, March 2, 2011

Romantic Duets of SPB & Janaki - Part 2

1) பூ என்பதா பொன் என்பதா
பூமாலை நீயே ராதா - உயிரே உனக்காக

2) பூவே பூவே ... பன்னீர் பூவே
உனை கனவில் பார்த்தேன் நேற்று
அந்த கனவை நனவாய் மாற்று - ?

3) நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீ தந்த மோகம் அல்லவோ - உணர்ச்சிகள்

4) பருவம் பாடும் பாட்டு
உன் உருவம் பார்த்து - மகள் மருமகளானாள்

5) ஒரு மாதிரியா உடம்பிருக்கு குளிரெடுக்கு
உன்னை கதகதப்பா அணைக்கட்டுமா கையிலெடுத்து
- மாடி வீட்டு ஏழை

6) புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
நிலாக்கூடு தன்னில் தூங்குமே
- குப்பத்து பொண்ணு

7) கேள்வி கேட்கும் நேரம் அல்ல இது
தேவை இன்பக் காதல் எனும் மது
- வீட்டுக்கு ஒரு பிள்ளை

8) விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா ? - கற்பூர தீபம்

9) வா மாலை நேரம் ...மையலேறும் ..
காதல் ராகம் என் கைகளில் - கற்பூர தீபம்

10) தேனருவியில் நனைந்திடும் மலரோ
- ஆகாய கங்கை

Powered by eSnips.com