Monday, September 24, 2012

சீர்காழி கோவிந்தராஜன்

சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சீர்காழியின் தந்தை சிவசிதம்பரம் கலைநாட்டம் மிக்கவர் . சீர்காழி கோவிலொன்றில் இராமயண இசை நாடம் நடத்தி வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்து பாடல்களும் பாடினார் கோவிந்தராஜன்,இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்ட கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை நடிகராகச் சேர்த்துவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அப்போதே கணித்துச்சொன்னார்கள். 0 பி.ஏஸ்.செட்டியார் , கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ் இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார். 1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜன் கதவைத் தட்டியது.. 0 கல்கி எழுதிய பொய்மான் காடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கோவிந்தராஜன். 0 ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கு சீர்காழியும் சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸும் பாடி வந்தார்கள். கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (ஏழு நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார். பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88) 0 சீர்காழி கோவிந்தராஜன் பக்தி,வீரம் , காதல், காமெடி, தத்துவம், எழுச்சி என்று பல ரசங்களில் பாடியிருந்தாலும் அவர் பாடியவற்றுள் காதல் ரசம் பொங்கும் பாடல்களை மட்டுமே மிகவும் விரும்பிக் கேட்பேன். 0 அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு - தைபிறந்தால் வழி பிறக்கும் 0 மாம்பழத் தோட்டம், மல்லிகைக் கூட்டம்,மணக்க வரும் மாலைப் பொழுதோடு மருவியணைக்கும் மயக்கம் பிறக்கும் மலர்ந்து வரும் ஆசை விழியோடு மன்மதன் வந்தான் தேரோடு....இங்கே .. காதலர் கண்ணும் நெஞ்சும் படக் படக் பட் பட் - ஒளிவிளக்கு 0 வட்ட வட்டப் பாறையிலே வந்து நிக்கும் வேளையிலே யார் கொடுத்த சேலையடி ஆலவட்டம் போடுதடி - பழனி 0 அன்பே என் ஆரமுதே வாராய் / தென்றலலை மீதினிலே திங்கள் பிறை தோணியினிலே தேன்மொழி உனை அழைத்தே செல்வேனே - கோமதியின் காதலன் 0 கூத்தாடும் கொண்டையிலே தொங்குதடி மல்லிகைப்பூ கேக்காத கேள்வியெல்லாம் கேட்குதடி உன் அழகே 0 பழனி சந்தன வாடை அடிக்குது பூசியது யாரோ பவள குங்கும நெத்தி மணக்குது சூடியது யாரோ இங்கு குயில போல பாட்டு வந்தது பாடியது யாரோ மெல்ல குலுங்கும் சலங்கை ஓசை வந்தது அடியது யாரோ - வாழ்க்கைப் படகு 0 காதல் உண்டாகும் கட்டழகி உன்னாலே நெஞ்சு ஒண்ணாகும் பக்கத்திலே நின்னாலே அடே கண்ணு சின்ன பொண்ணு என்னை கொஞ்சாதே கோழிமுட்டை கண்ணாலே - இரு வல்லவர்கள் 0 வாம்மா வாம்மா சின்னம்மா வயசு வந்த பொன்னம்மா இந்த நேரம் காட்டுக்குள்ளே எங்கே வந்த செல்லம்மா - தாயில்லா பிள்ளை 0 பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது - கொடுத்து வைத்தவள் 0 எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்நாளே இமையும் விழியும் போலே இணைந்தோம் அன்பினாலே - சக்கரவர்த்தித் திருமகள் 0 கரும்பாக இனிக்கின்ற பருவம் .. இதை கதையாக சொல்லுது உன் காதல் உருவம் .. அழகான மொழி பேசும் விழி இரண்டும் அமுதம் அதிலே நீ தருகின்றாய் பருகாத அமுதம் - கொங்கு நாட்டு தங்கம் 0 ஜிகு ஜிகு உடையிலே ஜில் ஜில் நடையிலே ஜெகமே தன்னால் மயங்குமே சிங்கார சிலையே நீ திரும்பி பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே - சபாஷ் மீனா 0 காதலென்னும் சோலையிலே ராதே ராதே நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே - சக்கரவர்த்தித் திருமகள் 0 தட்டு தடுமாறி நெஞ்சம் கை தொட்டு விளையாட கொஞ்சும் சிட்டு முகம் காதல் சொல்லும் கை பட்டு மலர் மேனி துள்ளும் - சாரதா 0 சிங்கார தேருக்கு சேலை கட்டி / சின்ன சின்ன இடையினில் பூவக்கட்டி தெரு தெருவா அத நடக்கவிட்டா / இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும் ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும் - இது சத்தியம் 0 சீவி முடிச்சிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு / தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா மச்சான் தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா /ஆறு புரம் தங்க மணி அல்லி வேஷம் போடுறாளாம் / நாடகம் பார்க்கப் போறேன் வாரியா பொண்ணே நாளைக்கி திரும்பிடலாம் ஜாலியா - பிள்ளைக்கனி அமுது 0 பொங்கும் அழகு பூத்து குலுங்கும் தங்கதாமரையே /அன்பு வெள்ளம் அள்ளி வழங்கும் இன்பக் காவிரியே - தங்கம் மனசு தங்கம் 0 உலகமெல்லாம் இருண்டது போல் தோணுது/உன் உருவம் ஒளிவிளக்காய் காணுது - கலைகள் எல்லாம் உன் வடிவினால் / மெய்க் காதலினால் எனக்கு சொந்தமானது- நான் கண்ட சொர்க்கம் 0 வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து /வாடாமல் இருக்கும் பூ என்ன பூ அன்புக் கணவனின் முன்னாலே மனைவி / அழகாகச் சிந்தும் புன்சிரிப்பூ - எங்கள் குல தேவி 0 வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய் மனமோகனா சுகுமாரா மறவேன் உனை எழில் தீரா - ராஜாதேசிங்கு 0 யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது - சபாஷ் மாப்பிள்ளை 0 செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் / தித்திக்கும் தேன் குடமே செண்பக பூச்சரமே செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் - யானைப்பாகன் 0 நிலவோடு வான்முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு எனதுள்ளம் உனைதேடுதே - ராஜராஜன் 0 இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே உமது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கியிசை பாடுதே - ராஜராஜன்

No comments: